சஜித் பிரேமதாச வவுனியாவில் இன்று காலை தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடும் சோதனை இடம்பெற்றது.
ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கான அனைத்து பொருட்களும் விசேட அதிரடிப்படையினரால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரசார கூட்டத்திற்கு வருபவர்கள் மண்டப வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களை கொண்டுசெல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சில மீற்றர் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி நடந்துவர அனுமதித்துள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா